இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியான அல்குர்ஆன் மனனப் போட்டி – 2024/2025
இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து நடாத்தும் தேசிய ரீதியான அல்குர்ஆன் மனனப் போட்டி – 2024/2025
இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டியினை இரண்டாவது தடவையாக நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளன. இப்போட்டி இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2025 ஜனவரி மாதமளவில் கொழும்பில் நடத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்போட்டிகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள், ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அரச பாடசாலைகள் ஆகியவற்றினை மையப்படுத்தி ஆண், பெண் இரு பாலாருக்கும் நான்கு பிரிவுகளாக நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெரும் போட்டியாளர்கள் சவூதி அரசாங்கத்தினால் பெறுமதியான பணப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்படுவர்.
மேற்படி போட்டியில் பங்குபற்றுவதற்கு தகுதியான போட்டியாளர்களை தெரிவு செய்யும் ஆரம்பக்கட்டப் போட்டி 2024 டிசம்பர் மாத ஆரம்பப் பகுதியில் பிராந்தியரீதியாக நடாத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய போட்டிகள் கீழ்வரும் அட்டவணைக்கமைய நடைபெறும்
பிராந்தியம் : மேற்கு
உள்ளடக்கப்படும் மாவட்டம் : கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போட்டி நடைபெறும் நிலையம் : கொழும்பு
பிராந்தியம் : மத்தி
உள்ளடக்கப்படும் மாவட்டம் : கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, கேகாலை, மொனராகலை
போட்டி நடைபெறும் நிலையம் : கண்டி
பிராந்தியம் : கிழக்கு
உள்ளடக்கப்படும் மாவட்டம் :அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலனறுவை
போட்டி நடைபெறும் நிலையம் :மட்டக்களப்பு
பிராந்தியம் : வடமத்தி
உள்ளடக்கப்படும் மாவட்டம் :குருணாகல், புத்தளம், அனுராதபுரம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம்
போட்டி நடைபெறும் நிலையம் :குருணாகல்
போட்டிகள் கீழ்வரும் பிரிவுகளில் நடைபெறும்
பிரிவு – 01 அல்குர்ஆன் முழுவதும்
(1 முதல் 30 வரையான ஜூஸ்உகள்)
ஆண்-பெண் 15 – 25
பிரிவு – 02 ஆரம்ப பத்து ஜூஸ்உகள்
(1 முதல் 10 வரையான ஜுஸ்உகள்)
வயது: ஆண்-பெண் 12 – 20
பிரிவு – 03 ஆரம்ப ஐந்து ஜூஸ்உகள்
(1 முதல் 05 வரையான ஜூஸ்உகள்)
வயது:ஆண்-பெண் 10 – 15
பிரிவு – 04 இறுதி இரண்டு ஜூஸ்உகள்
(ஜுஸ்உ அம்ம, ஜுஸ்உ தபாரக)
வயது:ஆண்-பெண் 07 – 12
போட்டி நிபந்தனைகள்:
1. இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
2. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரி, ஹிப்ழ் குர்ஆன் மத்ரஸா அல்லது அரச பாடசாலைகளில் கல்வி கற்பவராக இருத்தல்.
3. ஒரு போட்டியாளர் ஒரு பிரிவில் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.
4. போட்டியாளர்கள் ஏதாவது ஒரு சர்வதேச போட்டியில் ஏற்கனவே கலந்துகொள்ளாதவராகவும், கடந்த 2023 ஆம் ஆண்டு சவூதி தூதரகத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. விண்ணப்பதாரிகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், அடையாள அட்டை / செல்லுபடியாகும் கடவுச் சீட்டின் சான்றுப் பிரதிகள். மேலும், அடையாள அட்டை இல்லாதவர்கள் 2”x2” அளவிலான புகைப்படத்தின் பின்பக்கத்தில் பெயர், முகவரி என்பவற்றை குறிபிட்டு கல்லூரி அதிபர் மூலம் அத்தாட்சிப்படுத்தி போட்டியின் போது சமர்ப்பித்தல் வேண்டும்.
6. 2025.01.11 ஆம் திகதியில் போட்டிப்பிரிவுக்குரிய வயது கணிக்கப்படும்.
7. போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது.
8. போட்டி முடிவுகள் தொடர்பாக நடுவர்களின் தீர்மானமே இறுதியானதாகும்.
9. போட்டியாளர்கள் திணைக்களத்தின் விதிகளை மீறும் பட்சத்தில் போட்டியில் பங்குபற்றும் தகைமையை இழந்தவராக கருதப்படுவர்.
10. ஜனவரி மாதம் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு பிராந்தியத்தில் இருந்து தெரிவு செய்யபப்டும் போட்டியாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவர்.
11. பிராந்தியங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் போட்டியாளர்களின் எண்ணிக்கையை இத்திணைக்களமே தீர்மானிக்கும்.
விண்ணப்பங்களை google form ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். Google link https://forms.gle/H2PA33VrXxrajQxJ6 உரிய விண்ணப்பத்தின் வன் பிரதியினை (Hard copy) போட்டியில் கலந்து கொள்ளும் அன்றைய தினம் சமர்பித்தல் வேண்டும்.
குறிப்பு: தபால் மூலம் அல்லது நேரடியாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்ப முடிவுத் திகதி: 2024.11.27
M.S.M. நவாஸ்
பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,
இல. 180, T.B. ஜாயா மாவத்தை,
கொழும்பு -10.